நாடுகாணி சோதனை சாவடியில் தி.மு.க., டோக்கன் பறிமுதல்
நாடுகாணி சோதனை சாவடியில் தி.மு.க., டோக்கன் பறிமுதல்
ADDED : ஏப் 14, 2026 10:41 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே, நாடுகாணி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த, சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தபோது அதனுள் இருந்த அட்டை பெட்டிகளில், தி.மு.க., சார்பில் வழங்கப்படும் வகைகள், 8-,000 ரூபாய் மாதிரி கூப்பன்கள் இருந்தது தெரிய வந்தது.
அதில், 375 கூப்பன்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், கூப்பன்கள் மற்றும் சரக்கு வாகனத்தை தேவாலா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்ததுடன், கூடலுார் சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி ஆர்.டி.ஓ. குணசேகரனிடம் விவரங்களை தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
