sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'போதை, காதல் வலைகளில் சிக்காதீர்கள்'

/

'போதை, காதல் வலைகளில் சிக்காதீர்கள்'

'போதை, காதல் வலைகளில் சிக்காதீர்கள்'

'போதை, காதல் வலைகளில் சிக்காதீர்கள்'


ADDED : நவ 06, 2025 10:57 PM

Google News

ADDED : நவ 06, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தலைமையாசிரியை மார்கிரேட் அறிவுரையின் பேரில் நடந்த இந்த பேரணி, பள்ளி வளாகத்தில் துவங்கிய முக்கிய வீதி வழியாக பஸ் ஸ்டாண்டை அடைந்தது. நிறைவாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, குன்னூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தினகரன் பேசுகையில், தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் மாணவர் போதை உள்ளிட்ட தவறான பாதையில் செல்வதை தவிர்த்து, கல்வி, விளையாட்டு போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி நல்ல பாதையில் செல்ல வேண்டும்.

இதனால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். ஆசை என்பது அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இருக்க வேண்டும். பேராசையாக மாற கூடாது. பெற்றோரின் கஷ்டங்களை மாணவர்கள் புரிந்து கொண்டு, எதற்கும் அடம்பிடிக்காமல் அவர்களின் அறிவுரையை கேட்பது அவசியம். மாணவ பருவத்தில், காதல் வலையில் சிக்குவதால் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர், என்றார். பேரணியில், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஞான சவுந்தரி, ஆசிரியர்கள் லாவண்யா, சந்திரிகா, பிலோமினா அந்தோணியம்மாள், தனலட்சுமி, ஷாலினி, தங்கமுத்து, சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us