sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு: வாகனம் மூலம் தண்ணீர் 'சப்ளை'

/

வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு: வாகனம் மூலம் தண்ணீர் 'சப்ளை'

வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு: வாகனம் மூலம் தண்ணீர் 'சப்ளை'

வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு: வாகனம் மூலம் தண்ணீர் 'சப்ளை'


ADDED : ஜன 24, 2024 01:17 AM

Google News

ADDED : ஜன 24, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்தில், வறட்சியான பகுதிகளில் உள்ள தொட்டிகளில் குடிநீர் ஊற்றும் பணியை வனத்துறயைினர் துவங்கியுள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில், தொடரும் பனிப்பொழிவு காரணமாக, வறட்சி ஏற்பட துவங்கியுள்ளது. வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடும், தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மசினகுடி கோட்டம் சிங்கார வனச்சரகத்தில், வறட்சியான பகுதிகளில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவைகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் வகைகள் வனத்துறையினர் வாகனம் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று, அங்குள்ள சிமெண்ட் தொட்டிகளில் ஊற்றி வருகின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த ஆண்டு எதிர்பார்த்த பருவமழை இல்லாததால், மசினகுடி வனப்பகுதியில் கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சிங்கார வனச்சரக வனப் பகுதியில், வாகனம் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று தொட்டிகளில் ஊற்றி, அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். தொட்டிகளை கண்காணித்து தேவைக்கேற்ப தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us