/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை குட்டி மீட்பு வனத்தில் தாயிடம் சேர்ப்பு
/
யானை குட்டி மீட்பு வனத்தில் தாயிடம் சேர்ப்பு
ADDED : ஜன 05, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் புல்புள்ளி என்ற இடத்தில், வனத்தை ஒட்டிய குட்டி சிறா என்ற இடத்தில், கடை வீதிகளுக்கு மத்தியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், நேற்று மாலை யானை குட்டி ஒன்று நடந்து வந்துள்ளது.
இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு மாதமான யானை குட்டியை மீட்டனர். அருகே உள்ள வனத்தில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்தில் சேர்த்தனர்.