sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

எல்லையில் 'க்யூ.ஆர்.,' கோடு பயன்படுத்தி நுழைவு வரி வசூல்

/

எல்லையில் 'க்யூ.ஆர்.,' கோடு பயன்படுத்தி நுழைவு வரி வசூல்

எல்லையில் 'க்யூ.ஆர்.,' கோடு பயன்படுத்தி நுழைவு வரி வசூல்

எல்லையில் 'க்யூ.ஆர்.,' கோடு பயன்படுத்தி நுழைவு வரி வசூல்


ADDED : பிப் 07, 2025 08:14 PM

Google News

ADDED : பிப் 07, 2025 08:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் ; தமிழக-கேரள எல்லைகளில் உள்ள, வாகன நுழைவு வரி வசூல் மையங்களில், 'க்யூ.ஆர்.,' கோடு பயன்படுத்தி வாகன நுழைவு வரி வசூல் செய்யும் முறையை நடைமுறைக்கு வந்தது.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில எல்லைகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில், நுழைவு வரி வசூல் மையம் அமைத்து, வாகனங்களுக்கு நுழைவு வரி வசூல் செய்யப்படுகிறது.

அதில், தமிழக- கர்நாடகா எல்லையான முதுமலை கக்கனல்லா சோதனை சாவடி தேசிய நெடுஞ்சாலை இருப்பதால், வாகன நுழைவு வரி வசூலுக்கு மாற்றாக, பசுமை வரி வசூல் செய்து வருகின்றனர்.

மாநில எல்லைகளில், வாகனங்களுக்கு, ரசீது வழங்கி நுழைவு கட்டணத்தை பணமாக மட்டுமே பெற்று வந்தனர். இந்நிலையில், கர்நாடகா பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு, பசுமை வரி வசூல் செய்ய 'க்யூ.ஆர்.,' கோடு வசதியை மாவட்ட நிர்வாகம் நவ., மாதம் நடைமுறைபடுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது, தமிழக -கேரள எல்லையில் உள்ள, பிற வாகன நுழைவு வரி மையங்களில் தற்போது, 'க்யூ.ஆர்.,' கோடு ஸ்கேன் செய்து நுழைவு கட்டணம் வசூல் செய்யும் முறையை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது.

இதன் வாயிலாக, கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள், எளிதாக நுழைவு கட்டணம் செலுத்தி செல்கின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'மாநில எல்லையில் உள்ள வாகன வரி வசூல் மையங்களில், ரசீது வழங்கி நுழைவு கட்டணம் பெற்று வருகின்றனர். இதில் சில்லரை தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க, 'க்யூ.ஆர்.,' கோடு ஸ்கேன் மூலமும் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us