sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 நிலுவை சம்பளம் கேட்டு எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

/

 நிலுவை சம்பளம் கேட்டு எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

 நிலுவை சம்பளம் கேட்டு எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

 நிலுவை சம்பளம் கேட்டு எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : நவ 21, 2025 05:51 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, இரண்டு மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி, தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலுார் தேவர்சோலை அருகே, உள்ள தனியார் எஸ்டேடில், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த செப்., அக்., மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் வருவாய் இன்றி குடும்ப செலவிற்கு கூட, சிரமப்பட்டு வருகின்றனர்.

நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து, நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடந்தது.

அதில், 'இவ்வாரம் துவக்கத்தில், நிலுவை சம்பளம் வழங்கப்படும்,' என, நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், நிலுவை சம்பளம் வழங்கவில்லை.

அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள், நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

தொழிலாளர்கள் கூறுகையில், 'இரண்டு மாதமாக உள்ள, நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நிலுவை சம்பளத்தை வழங்கவில்லையெனில் போராட்டம் தொடரும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us