sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்: உரிய இழப்பீடு கேட்கும் விவசாயிகள்

/

விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்: உரிய இழப்பீடு கேட்கும் விவசாயிகள்

விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்: உரிய இழப்பீடு கேட்கும் விவசாயிகள்

விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்: உரிய இழப்பீடு கேட்கும் விவசாயிகள்


ADDED : அக் 21, 2025 07:57 PM

Google News

ADDED : அக் 21, 2025 07:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கூடலூர், பாடந்துறை, தேன்வயல் பகுதிகளில் நுழைந்த காட்டு யானைகள் வாழை, பாக்கு மரங்களை சேதப்படுத்தியது.

கூடலூரை ஒட்டிய வனப் பகுதிகளில் முகாமிடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க, வனத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், யானைகள் ஊருக்குள் நுழைவதை, நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு பாடந்துறை மற்றும் புத்துவயல் அருகேயுள்ள தேன்வயல் பகுதிகளில் விவசாய தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு நேந்திரன் வாழை, பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வன ஊழியர்கள் யானைகளை விரட்டினர். தொடரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மக்கள் கூறுகையில், 'யானைகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் அச்சமின்றி இருக்க, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us