sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 'இன்கோ' நிலுவை தொகை தீர்வுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

 'இன்கோ' நிலுவை தொகை தீர்வுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு

 'இன்கோ' நிலுவை தொகை தீர்வுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு

 'இன்கோ' நிலுவை தொகை தீர்வுக்கு விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 12, 2025 08:58 PM

Google News

ADDED : நவ 12, 2025 08:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் 'இன்கோசர்வ்' அலுவலகத்தில், ஆரி கவுடர் விவசாயிகள் நல சங்கம் சார்பில், நிலுவை தொகை வழங்குவது தொடர்பான அதிகாரிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

இன்கோசர்வ் முதன்மை செயலாட்சியர் ராஜகோபால் தலைமையில், பொதுமேலாளர் திருமலை, துணை பொது மேலாளர் ஜெயராஜ் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது.

அதில்,'நீலகிரி இன்கோ நிர்வாகம் தேயிலை வாரியத்தால் நிர்ணயிக்கப்படும் மாதாந்திர பசுந்தேயிலைக்கான விலையை மாற்றமின்றி வழங்க வேண்டும்; இன்கோ தொழிற்சாலையில் அக்., 2024ம் ஆண்டுக்கான விலை வித்தியாச நிலுவை தொகை ஒரு கோடி, 72 லட்சத்து, 32 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். எப்பநாடு இன்கோ தேயிலை தொழிற்சாலையில் உறுப்பினர்களுக்கு கடந்த, 7 ஆண்டுகளாக வழங்கவேண்டிய நிலுவை தொகையை தவணை முறையில் வழங்க வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகள், சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஆரிகவுடர் விவசாயிகள் சங்க தலைவர் மஞ்சை மோகன், துணை தலைவர் போஜன், துணை செயலாளர் வாசு உட்பட பலர் பங்கேற்றனர். உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.






      Dinamalar
      Follow us