சாலையில் விழுந்த மரத்தை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்
சாலையில் விழுந்த மரத்தை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்
ADDED : ஜூலை 03, 2026 03:25 AM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வெயிலும், இதமான காலநிலையும் நிலவுகிறது.இந்நிலையில், நேற்று மாலை சப்ளை டிப்போ அருகே கேபி காலனி செல்லும் சாலையில் மரம் விழுந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலின் பேரில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் தட்சிணாமூர்த்தி(பொ) தலைமையில் தீயணைப்புத் வீரர்கள் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து, வாகனங்கள் சென்றன.
