/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்துறை கட்டுப்பாடு ஜீப் ஓட்டுனர்கள் முற்றுகை
/
வனத்துறை கட்டுப்பாடு ஜீப் ஓட்டுனர்கள் முற்றுகை
ADDED : ஜன 06, 2024 08:29 PM

கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை, மசினகுடி பகுதியில், 200க்கும் மேற்பட்ட தனியார் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள விபூதிமலை செல்லும் வழியில், செந்நாய் குட்டிகள் ஈன்றுள்ளதால், அப்பகுதியில் தனியார் சுற்றுலா வாகனங்களை இயக்க, வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதனால், அதிருப்தியடைந்த சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் காலை, 9:00 மணிக்கு மசனகுடியில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுக்கு பின், மறியலை கைவிட்டனர்.
தொடர்ந்து மசினகுடி வனச்சரக அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனச்சரகர்கள் பாலாஜி தயானந்தன் பேச்சு நடத்தினார்.
டிரைவர்கள், 'சுற்றுலா வாகனங்கள் இயக்க தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்க்க வேண்டும். விபூதி மலைக்கு வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும். மீண்டும், சூழல் சுற்றுலா மூலம் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட வேண்டும்' என்றனர்.
இது தொடர்பாக, துணை இயக்குனர் தலைமையில் கூட்டம் நடைபெறும் வரை, வாகனங்களை இயக்க, வனத்துறையினர் அனுமதி வழங்கினர். அதை ஏற்று, ஓட்டுனர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.