sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை

/

 காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை

 காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை

 காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை


ADDED : டிச 25, 2025 07:13 AM

Google News

ADDED : டிச 25, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: முதுமலை மசினகுடி தெங்குமரஹாடா வனப்பகுதியில், பெண் யானை, குட்டி ஈனுவதில் ஏற்பட்ட பிரச்னையில்பரிதாபமாக உயிரிழந்தது.

முதுமலை, மசினகுடி கோட்டம், நீலகிரி கிழக்கு வனச்சரகம் தெங்குமரஹடா கல்லாம்பாளையம் வனப்பகுதியில், 22ம் தேதி மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் போது, பெண் யானை இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் உடலை, வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், வனச்சரகர் வெங்கடேஷ் மற்றும் வன ஊழியர்கள் நேற்று செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு, 40 வயது இருக்கும். கர்ப்பமாக இருந்த பெண் யானை குட்டி ஈனுதல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக உயிரிழந்திருக்கலாம். எனினும் ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்தப்பின், வேறு காரணம் இருப்பின் தெரியவரும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us