sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டெருமை இறப்பு; வனத்துறை விசாரணை

/

காட்டெருமை இறப்பு; வனத்துறை விசாரணை

காட்டெருமை இறப்பு; வனத்துறை விசாரணை

காட்டெருமை இறப்பு; வனத்துறை விசாரணை


ADDED : செப் 15, 2025 09:01 PM

Google News

ADDED : செப் 15, 2025 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி அருகே காட்டெருமை இறந்தது தொடர்பாக, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகம், குடிமனை பகுதியில் தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன.

தவிர, அப்பகுதியில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், உணவை தேடி வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் முகாமிட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக, அதே பகுதியில் வயதான காட்டெருமை, சுற்றி திரிந்த நிலையில், நேற்று காலை இறந்துள்ளது. பகுதி மக்கள் கொடுத்த தகவலின் படி, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து உறுதி செய்தனர்.

கால்நடை மருத்துவர் ரேவதி, பிரேத பரிசோதனை செய்த பின், அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

வனத்துறையினர் கூறுகையில், '15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை சுகவீனமாக இருந்த நிலையில் இறந்துள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதே இடத்தில் புதைக்கப்பட்டது,' என்றனர்.






      Dinamalar
      Follow us