sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 காட்டில் தவித்த புலி குட்டிகள் தாயுடன் சேர்த்த வனத்துறை

/

 காட்டில் தவித்த புலி குட்டிகள் தாயுடன் சேர்த்த வனத்துறை

 காட்டில் தவித்த புலி குட்டிகள் தாயுடன் சேர்த்த வனத்துறை

 காட்டில் தவித்த புலி குட்டிகள் தாயுடன் சேர்த்த வனத்துறை


ADDED : டிச 03, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கர்நாடக மாநிலம் நாகர்ேஹாலோ புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள, உன்சூர் விவசாய தோட்டத்தில், தனியாக தவித்த நான்கு புலி குட்டிகளை, கர்நாடகா வனத்துறையினர் மீட்டு, மைசூரு வனவிலங்கு மீட்பு மையத்தில் உள்ள தாயுடன் சேர்த்தனர்.

கர்நாடக மாநிலம், நாகர்ஹோலோ புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள, உன்சூர் தாலுகா கவுடனகட்டே ஒட்டிய குடியிருப்பு பகுதியில் உலா வந்த, 10 வயது பெண் புலி மக்களை அச்சுறுத்தி வந்தது.

தொடர்ந்து, கடந்த, 28ம் தேதி புலியை பிடித்து, மைசூரு அருகே, கூர்கஹல்லியில் உள்ள வனவிலங்கு மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தில் சேர்த்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், அதன் குட்டிகள் அப்பகுதியில் சுற்றி வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், கர்நாடகா வனத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து, அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதல் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு நாள் முயற்சிக்கு பின், அப்பகுதியில் பதுங்கி இருந்த, 4 புலி குட்டிகளை பாதுகாப்பாக மீட்டனர். அவைகளை, மைசூரு வனவிலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தில் உள்ள அதன் தாயுடன் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us