ADDED : ஏப் 01, 2026 10:11 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி டானிங்டன் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கருமாரியம்மன் மற்றும் ஸ்ரீ வாராகி அம்மன் கோவிலில் நடந்த பவுர்ணமி பூஜை நடந்தது.
கோவில் நிர்வாக குழு தலைவர் ராஜேஷ் சுந்தர் முன்னிலையில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பஜனை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் ஆடல் பாடல் இடம் பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல, கடை வீதி மாரியம்மன் கோயில், பண்ணாரி அம்மன் கோவில் மற்றும் சக்திமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பவுர்ணமி பூஜை நடந்தது.
