sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தடுப்பணையில் தேங்கிய குப்பை கழிவுகள்

/

தடுப்பணையில் தேங்கிய குப்பை கழிவுகள்

தடுப்பணையில் தேங்கிய குப்பை கழிவுகள்

தடுப்பணையில் தேங்கிய குப்பை கழிவுகள்


ADDED : நவ 02, 2025 10:45 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: இரும்பு பாலம் தடுப்பணையில் தேங்கும் குப்பைகளால் நீர் மாசு படுகிறது.

கூடலூர், கோழிக்கோடு சாலை இரும்புபாலம் அருகே, கூடலூர் நகராட்சியில், 2வது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்காக, அப்பகுதி ஆற்றின் கரையில் கிணறு அமைத்து, மோட்டார் வாயிலாக, தண்ணீர் வினியோகித்து வருகின்றனர். அங்குள்ள ஆற்றின் குறுக்கே, தடுப்பணை அமைத்து, அதிலிருந்து குழாயில் கிணற்றுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம், ஆற்றின் கரையில் இருந்த மரம், சாய்ந்து தடுப்பணையில் விழுந்தது. தடுப்பணையில் கழிவுகள் தேங்கியுள்ளன. மரத்தை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.

இதனால், தற்போது சாய்ந்த மரத்தை ஒட்டி, குப்பைகள், காய்ந்த மூங்கில்கள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி தடுப்பணை மாசுப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனே ஆய்வு மேற்கொண்டு, மரத்தை அகற்றி, தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us