sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பழங்குடியினர் கிராமத்துக்கு அரசு பஸ் சேவை துவக்கம்

/

 பழங்குடியினர் கிராமத்துக்கு அரசு பஸ் சேவை துவக்கம்

 பழங்குடியினர் கிராமத்துக்கு அரசு பஸ் சேவை துவக்கம்

 பழங்குடியினர் கிராமத்துக்கு அரசு பஸ் சேவை துவக்கம்


ADDED : டிச 08, 2025 05:11 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி குள்ளங்கரை பழங்குடியினர் கிராமத்திற்கு, முதல் முதலாக அரசு பஸ் சேவை துவக்கப்பட்டுள்ளதால், பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோத்தகிரியில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள குள்ளங்கரை கிராமத்தில், இருளர் பழங்குடியினர் மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் அமைந்துள்ள கிராமத்தில், வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு இடையே வாழ்ந்து வரும் பழங்குடியின மக் களுக்கு, இதுவரை அரசு பஸ் இயக்கப்படவில்லை. இதனால், தங்களது தேவைகளுக்காக, 3 கி.மீ., தூரம் நடந்து சென்று நகர பகுதிக்கு, வர வேண்டிய நிலை இருந்தது.

பள்ளி மாணவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவோர், பாதிக்கப்பட்டனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சாலை அமைக்கப்பட்டு, முதல் முதலாக அரசு பஸ் இயக்கப்பட்டது.

அரசு கொறடா ராமச்சந்திரன் அரசு பஸ் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜூ, ஒன்றிய செயலாளர் பீமன் உட்பட, கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.

முதல் முதலாக இயக்கப்பட்ட இந்த பஸ்சில் மகளிருக்கு கட்டணம் இல்லை என்பதால், பெண்கள் உட்பட, கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us