sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு விழா: 421 பயனாளிகளுக்கு பட்டா

/

அரசு விழா: 421 பயனாளிகளுக்கு பட்டா

அரசு விழா: 421 பயனாளிகளுக்கு பட்டா

அரசு விழா: 421 பயனாளிகளுக்கு பட்டா


ADDED : ஜன 10, 2024 10:34 PM

Google News

ADDED : ஜன 10, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுாரில் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மறைந்த முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலவச பட்டா, மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

ஆர்.டி.ஓ., முகமது குதரத்துல்லா வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசினார். விழாவில், நீலகிரி எம்.பி., ராஜா பேசுகையில், ''மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட, ரேஷன் கடையின் மூலம், 1000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது. கூடலுார் அருகே, சிறுத்தை தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

அரசு அதிகாரிகள் அந்த சிறுத்தையை பிடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, முதல்வர் உத்தரவை தொடர்ந்து தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது,'' என்றார்.

தொடர்ந்து, 421 பயனாளிகளுக்கு பட்டாவும்; 657 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் கீதா, நகராட்சி தலைவர் பரிமளா உட்பட பலர் பங்கேற்றனர். பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us