/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா
/
பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா
ADDED : ஏப் 21, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் பந்தலுார் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படித்த, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் கீதா சரஸ்வதி தலைமை வகித்தார். ஆசிரியர் பாக்யராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், 5-ம் வகுப்பு நிறைவு செய்து, 6-ம் வகுப்பு செல்ல உள்ள மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு கணித உபகரணங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பெற்றோர் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

