sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 வீணாக காணப்படும் பகுதி சீரமைத்தால் 'பார்க்கிங்' செய்யலாம்

/

 வீணாக காணப்படும் பகுதி சீரமைத்தால் 'பார்க்கிங்' செய்யலாம்

 வீணாக காணப்படும் பகுதி சீரமைத்தால் 'பார்க்கிங்' செய்யலாம்

 வீணாக காணப்படும் பகுதி சீரமைத்தால் 'பார்க்கிங்' செய்யலாம்


ADDED : டிச 10, 2025 08:14 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காலியிடத்தை சமன் செய்தால், பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாக சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு நகராட்சிக்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, 'பார்க்கிங்' வசதி மிகவும் குறைவு.

இதனால், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக, வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு, வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில், போலீசார் அவ்வப்போது அபராதம் விதிப்பது தொடர்கிறது. இதனை தடுக்க, நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சில இடங்கள் செடிகள் முளைத்து பயனற்று கிடக்கின்றன.

இந்த வகையான இடங்களை அதிகாரிகள் கண்டறிந்து சமன் செய்து தளம் அமைக்கும் பட்சத்தில், அதிக எண்ணிக்கையில் வாகனங்களை நிறுத்த முடியும். இதனால் போக்குவரத்து நெரிசலும், அபராதம் விதிப்பதும் வெகுவாக குறையும்.

குறிப்பாக, நகராட்சி அலுவலகம் இடதுபுறத்தில், நெடுஞ்சாலையை ஒட்டி, வீணாக விடப்பட்டுள்ள இடத்தை சமன் செய்யும் பட்சத்தில், 20க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்த முடியும். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us