/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இடம் பெயரும் வனவிலங்குகள் வறட்சியின் தாக்கம்! பயணிகளுக்கு வனத்துறை அறிவுரை
/
இடம் பெயரும் வனவிலங்குகள் வறட்சியின் தாக்கம்! பயணிகளுக்கு வனத்துறை அறிவுரை
இடம் பெயரும் வனவிலங்குகள் வறட்சியின் தாக்கம்! பயணிகளுக்கு வனத்துறை அறிவுரை
இடம் பெயரும் வனவிலங்குகள் வறட்சியின் தாக்கம்! பயணிகளுக்கு வனத்துறை அறிவுரை
ADDED : ஜன 30, 2024 11:24 PM

கூடலுார்:முதுமலையில், ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி இடம்பெயர துவங்கி உள்ளன.
முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்யவில்லை. தற்போது, காலம்மாறி நிலவும் பனி பொழிவால், வனப்பகுதியில் கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் துவங்கி உள்ளது.
புற்கள், தாவரங்கள் கருகியும், மரங்களில் இலைகள் உதிர்ந்து வனப்பகுதி பசுமை இழந்து வருகிறது. இதனால், வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, யானை, காட்டெருமை போன்ற தாவர உண்ணிகள் உணவு, குடிநீர் தேடி இடம்பெயர துவங்கியுள்ளது. ஆனால், மான் மற்றும் சிறிய வன உயிரினங்கள் இப்பகுதியில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வனத்துறையினர் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று, வறட்சியான வனப்பகுதிகளில் உள்ள 'சிமென்ட்' தொட்டிகளில் ஊற்றி வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதாலும், தொடரும் பனிப்பொழிவு காரணமாக, கோடைக்கும் முன்பாகவே வனப் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால், வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வன பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வாகனங்கள் மூலம் சுழற்சி முறையில் தண்ணீர் ஊற்றி வருகிறோம்.
கோடை மழை பெய்தால் மட்டுமே, தீர்வு கிடைக்கும். இதனால், கோடை மழையை எதிர்பார்த்துள்ளோம். மேலும், வனத் தீ ஏற்படும் ஆபத்து உள்ளதால், இவ்வழியாக பயணிக்கும் வாகன டிரைவர்கள்; சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.