sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு; குகையில் காட்டெருமை நின்றதால் ரயில் தாமதம்

/

மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு; குகையில் காட்டெருமை நின்றதால் ரயில் தாமதம்

மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு; குகையில் காட்டெருமை நின்றதால் ரயில் தாமதம்

மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு; குகையில் காட்டெருமை நின்றதால் ரயில் தாமதம்


ADDED : ஜன 02, 2024 10:38 PM

Google News

ADDED : ஜன 02, 2024 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுாரில் கடும் பனிமூட்டம் மற்றும் குகையில் காட்டெருமை நின்றதால் மலை ரயில் தாமதமானது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ஊட்டி மலை ரயில், கடும் பனிமூட்டம் காரணமாக மிகவும் மெதுவாக இயக்கப்பட்டது.

இந்த ரயில் ஹில்குரோவ் அருகே வந்த போது, குகையில் காட்டெருமை நின்றதால் ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பி காட்டெருமை விரட்டப்பட்டது. இதனால், காலை, 10:00 மணிக்கு வர வேண்டிய மலை ரயில், 40 நிமிடங்கள் தாமதமானது. எனினும் இயற்கை காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடியாமல் இருந்த போதும். பனிமூட்டம் இடையே செல்பி மற்றும் புகைப்படங்களை எடுக்க பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டினர். தற்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ள நிலையில் மலை ரயிலில் பயணம் செய்ய பலரும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us