sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அதிகரிக்கும் 'பிளாஸ்டிக்' பூக்கள் தடை; தீர்மானத்தை மறந்த நகராட்சி

/

அதிகரிக்கும் 'பிளாஸ்டிக்' பூக்கள் தடை; தீர்மானத்தை மறந்த நகராட்சி

அதிகரிக்கும் 'பிளாஸ்டிக்' பூக்கள் தடை; தீர்மானத்தை மறந்த நகராட்சி

அதிகரிக்கும் 'பிளாஸ்டிக்' பூக்கள் தடை; தீர்மானத்தை மறந்த நகராட்சி


ADDED : அக் 18, 2024 10:04 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : 'குன்னுார் பகுதிகளில் 'பிளாஸ்டிக்' பூக்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 'பிளாஸ்டிக்' பயன்படுத்த தடை உள்ளது. இதனால், அவ்வப்போது வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பறிமுதல் செய்து பயன்படுத்துபவர்களிடம் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், திருமண மண்டபங்களில் அலங்காரத்திற்காக பிளாஸ்டிக் பூக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு தான் பிளாஸ்டிக் பூக்கள் தடை விதிக்க, குன்னுார் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ஊட்டியிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும், நகராட்சி நிர்வாகம் இதனை செயல்படுத்த மறந்து போனதால், இவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள துணி கடைகளில் பிளாஸ்டிக் பூக்கள் தொங்க விடப்பட்டுள்ளது. இவற்றை தினமும் நகராட்சி அதிகாரிகள் பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

எனவே, இப்பகுதிகளை ஆய்வு செய்து, 'பிளாஸ்டிக்' பூக்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us