/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலி நடமாடியதாக பரவிய தகவல் .. மக்கள் அச்சம்: வனத்துறை ஆய்வு
/
புலி நடமாடியதாக பரவிய தகவல் .. மக்கள் அச்சம்: வனத்துறை ஆய்வு
புலி நடமாடியதாக பரவிய தகவல் .. மக்கள் அச்சம்: வனத்துறை ஆய்வு
புலி நடமாடியதாக பரவிய தகவல் .. மக்கள் அச்சம்: வனத்துறை ஆய்வு
ADDED : பிப் 03, 2025 11:13 PM
மஞ்சூர்; 'எடக்காட்டில் புலி நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவல் பொய்யானது,' என, வனத்துறை தெரிவித்தனர்.
மஞ்சூர் அருகே குந்தா பாலம் சாலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இரவில் புலி நடந்து செல்லும் 'வீடியோ' சமூக வலைதளத்தில் வைரலானது. குந்தா வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் அந்த புலி குட்டியுடன் சுற்றி வருவதாக, தற்போது சமூக வலை தளத்தில் மீண்டும் வீடியோ வைரலானதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'எடக்காடு பஜார் பகுதியில் புலி நடப்பது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதால், கடந்த இரண்டு நாட்களாக பீதி அடைந்தோம். வனத்துறையினர் ஆய்வில் புலி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற பொய்யான தகவலை பரப்புபவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
குந்தா ரேஞ்சர் சீனிவாசன் கூறுகையில்,'' சமூக வலை தளங்களில் எடக்காட்டில் புலி இருப்பது போன்று 'மார்பிங்' செய்யப்பட்டு பரப்பப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.

