ADDED : பிப் 16, 2024 12:16 AM
அ நிறம் | அளவு
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் இ-சேவை மையம் மூலம் உட்பிரிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நில உரிமைதாரர்கள், தங்களிடம் கிரைய ஆவணமோ, தானபத்திரமோ பாகபிரிவினை பத்திரங்கள் உள்ளிட்ட முறையாக பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட்ட ஆவணங்கள் வைத்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர் அருணா அறிக்கை:
இதுநாள் வரை, உட்பிரிவு செய்யாமல், கூட்டு பட்டாதாரர்களாகவே இருக்கும் நபர்கள், அருகில் உள்ள இ--சேவை மையங்களில் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் உட்பிரிவு விண்ணப்பங்களை அளித்து, உட்பிரிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
