sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; அடுத்தமாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

/

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; அடுத்தமாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; அடுத்தமாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; அடுத்தமாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு


ADDED : ஆக 26, 2025 09:37 PM

Google News

ADDED : ஆக 26, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டியில் நடந்து வரும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த மாதம், 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, 'சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ்சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, பிஜின் குட்டி,' ஆகிய, 10 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

தி.மு.க.,ஆட்சிக்கு வந்த பின், கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, இதுவரை, 316 பேரிடம் தனிப்படையினர் மறு விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 'கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கோடநாடு பங்களாவில் தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளதால், வழக்கை விசாரித்து வரும் மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வக்கீல்கள் கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்,' என்று கூறி இந்த வழக்கில், 10வது குற்றச்சாட்டப்பட்ட நபரான ஜித்தின் ஜாய் தரப்பில் கடந்த ஏப்., மாதம் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனு தள்ளுபடி நேற்று நடந்த விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட, வாளையார் மனோஜ் வந்திருந்தார். அப்போது, 'நிபுணர் குழு கோடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை அளித்து, தற்போது புலன் விசாரணை நடந்து வருவதால் கோடநாடு பங்களாவை எதிர் தரப்பு வக்கீல்கள் ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது. 'தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதி மட்டும் ஆய்வு செய்யலாம்,' என, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, ஜித்தின் ஜாய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை அடுத்த செப்., 19ம் தேதிக்கும் ஒத்திவைத்து, நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us