sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோடநாடு வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு

/

கோடநாடு வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு


ADDED : ஆக 14, 2025 08:14 PM

Google News

ADDED : ஆக 14, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை வரும், 26ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, நீலகிரி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய் ஆஜராகினார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் தரப்பில் ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையில் போலீசார் மற்றும் அரசு தரப்பு சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள்; எதிர் தரப்பு வக்கீல்கள் குற்ற சம்பவம் நடந்த கோடநாடு பங்களாவை நேரில் சென்று ஆய்வு செய்வது குறித்து தங்களது வாதங்களை முன் வைத்தனர். மேலும், 'வழக்கில் முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டும்,' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கை இம்மாதம், 26ம் தேதிக்கு நீதிபதிமுரளிதரன் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us