/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செஸ் போட்டியில் கலக்கிய குட்டீஸ்களுக்கு பாராட்டு
/
செஸ் போட்டியில் கலக்கிய குட்டீஸ்களுக்கு பாராட்டு
ADDED : அக் 16, 2024 08:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் : மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஊட்டியில் நடைபெற்றது. அதில், 9- வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், பந்தலுார் அருகே உப்பட்டி பாரதமாதா மேல்நிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
அதில், மாணவி கவிஸ்ரீ முதல் இடத்தையும், மிராக்லின்சுஸ்டிகா, 3-ம் இடத்தையும் பிடித்தனர். இருவரும் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் பாதர் ஜோய், தலைமையாசிரியர் பிஜுஜோசப், உடற்கல்வி ஆசிரியர் சார்லஸ் பாராட்டு தெரிவித்தனர்.

