sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பிற மாவட்ட நாற்று வகை விற்பனைக்கு உரிமம் கட்டாயம்! போலீஸ் உதவியுடன் சோதனை சாவடிகளில் ஆய்வு

/

பிற மாவட்ட நாற்று வகை விற்பனைக்கு உரிமம் கட்டாயம்! போலீஸ் உதவியுடன் சோதனை சாவடிகளில் ஆய்வு

பிற மாவட்ட நாற்று வகை விற்பனைக்கு உரிமம் கட்டாயம்! போலீஸ் உதவியுடன் சோதனை சாவடிகளில் ஆய்வு

பிற மாவட்ட நாற்று வகை விற்பனைக்கு உரிமம் கட்டாயம்! போலீஸ் உதவியுடன் சோதனை சாவடிகளில் ஆய்வு


ADDED : நவ 07, 2025 08:48 PM

Google News

ADDED : நவ 07, 2025 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: பிற மாவட்டத்திலி ருந்து நீலகிரிக்கு விற்பனைக்கு கொண்டு வரும் காய்கறி, பழ நாற்றுக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். கண்காணிக்க சோதனை சாவடி களில் விதை ஆய்வா ளர்கள் , போலீசார் உதவியுடன் சோதனை மேற் கொண்டு ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டும் அனுமதிக்கின்றனர்.

நீலகிரியின் தட்பவெப்ப நிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. இங்கு தேயிலை, காய்கறிகள், பழங்கள், நறுமண பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலை தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

அதில், குன்னுார்,கோத்தகிரி, குந்தா பகுதிகளில் தேயிலை, உருளை கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், பூண்டு, உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் இங்கிலீஸ் காய்கறிகளான நுால்கோல், டர்னிப் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், வாழை, காபி, மிளகு, இஞ்சி மற்றும் பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

தோட்டக்கலை பயிரான மலைகாய்கறி, நீலகிரியில் ஆண்டிற்கு, 'நீர் போகம்; கார் போகம் மற்றும் கடை போகம்' என, மூன்று பருவங்களாக சாகுபடி செய்யப்படுகிறது.

கிராமங்களில் விழிப்புணர்வு

நீலகிரியை பொறுத்தவரை, 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை விவசாயம்; 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தவிர, தேயிலை தோட்ட நடுவில் ஊடு பயிராக பல ஏக்கரில் மலை காய்கறி, காபி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

அதே வேளையில் திடீர் காலநிலை மாற்றத்தால் சில பகுதிகளில் அதிக மழை பொழிவு ஏற்பட்டு மலை காய்கறிகள் பாதிக்கப்படுகிறது.

ஒரு சில நேரங்களில் கடும் மேகமூட்டம் தென்படுவதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

காலநிலை மாற்றத்தின் போது பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறையினர் அவ்வப்போது கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

இயற்கை விவசாயம், இடுப்பொருட்களுக்கான மானிய திட்டங்களையும் தெரிவித்து வருகின்றனர். மண் வளம் பாதுகாப்பு மற்றும் விதை பரிசோதனை , காய்கறி, பழங்களுக்கான தரமான நாற்று பெறுவதின் அவசியம் குறித்தும் முகாம் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான வழிமுறைகளை தெரிவித்து வருகின்றனர்.

கோவை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் ரேவதி கூறுகையில், '' நீலகிரியில் அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு தேயிலை, மலை காய்கறி, வாழை, பாக்கு, காபி, காய்கறி வகைகள், சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக, பாக்கு, காபி, வாழை, காய்கறி, பழ உள்ளிட்ட நாற்றுகளை விற்பனை செய்வோர் கட்டாயம் விதை உரிமம் பெற வேண்டும்.

நாற்று வகைகளில் குற்றச்சாட்டு எழுந்ததால், தற்போது, பிற மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வணிகர் நோக்கில் கொண்டு வரும் நாற்றுகளுக்கு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை விதை ஆய்வாளர்கள் போலீசார் உதவியுடன் எல்லையோர சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.'' என்றார்.






      Dinamalar
      Follow us