/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெளிநாட்டு பல்கலையில் உயர் கல்வி பயில கடன்
/
வெளிநாட்டு பல்கலையில் உயர் கல்வி பயில கடன்
ADDED : அக் 05, 2025 10:57 PM
ஊட்டி; வெளிநாட்டு பல்கலையில் உயர் கல்வி பயில கடன் உதவி வழங்கப்படுகிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக, 100 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரப்பினர் வெளிநாட்டு பல்கலையில் உயர் கல்வி பயில, கடன் வழங்கப்படுகிறது. பயன் பெற விருப்பம் உள்ளவர்கள், ஜாதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாநில அரசின் வருமான சான்றிதழ் வழங்கும் தகுதி வாய்ந்த அதிகாரியால் சான்று பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள், பி.எச்.டி., முதுகலை பட்டப் படிப்புகள் போன்றவற்றில், முதுகலை படிப்புகளுக்கு பொருத்தமான அதிகாரியால், அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்க ள் அடிப்படையில் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் கல்லுாரியில் சேர்க்கை பெற்று இருக்க வேண் டும்.
அதிகபட்சம் ரூ.15 லட்சம் ஒரு மாணவருக்கு, அதிகபட்ச கடன் வரம்பு, 15 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட பாடத்திட்டத்தில் செலவில், 85 சதவீதம் டெல்லி தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாகவும், மீதமுள்ள, 15 சதவீதம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். கல்வி நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் கடன் தொகை விடுவிக்கப்படும்.
முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி விகிதத்தில் அடிப்படையில் மட்டுமே, கட்டணத் தொகை விடுவிக்கப்படும். வயது வரம்பு, 21 முதல் 40 வயது வரை. வட்டி விகிதம் ஆண்டிற்கு, 8 சதவீதம். பாடத்தின் வகை மற்றும் காலத்தை பொருள் படுத்தாமல், மாணவர்களிடம் இருந்து, மீளப்பெறுவதற்கான தடைக்காலம், 5 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நிர்ணிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் இருந்து, அதிகபட்சமாக மீட்கும் காலம், 10 ஆண்டுகள் ஆகும்.
முன் கட்டணம் ஏதும் இல்லை. கடனை திரும்ப செலுத்த தொடங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் கடனை திருப்பி செலுத்தலாம். இதற்கான முன் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. விண்ணப்ப படிவம் இக்கழக இணைய தள முகவரியில், (www.tabcedco.tn.gov.in) ல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, வங்கி கோரும் ஆவண நகல்களுடன் பிங்கர் போஸ்ட் மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களில் இணை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.