sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவிலில் மண்டல பூஜை; பக்தர்கள் பங்கேற்பு

/

கோவிலில் மண்டல பூஜை; பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் மண்டல பூஜை; பக்தர்கள் பங்கேற்பு

கோவிலில் மண்டல பூஜை; பக்தர்கள் பங்கேற்பு


ADDED : டிச 03, 2024 08:45 PM

Google News

ADDED : டிச 03, 2024 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நேற்று சிறப்பாக நடந்தது.

கோத்தகிரி கடைவீதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், கடந்த, 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, 48 நாட்கள் மண்டல பூஜை தொடர்ந்து நடந்து வருகிறது. நாள்தோறும், அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோத்தகிரி வட்டார போயர் சமூகத்தினரின் உபயமாக, 12வது நாளான நேற்று, மண்டல பூஜை நடந்தது.

அதிகாலை முதல், அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, மலர் அலங்கார வழிபாடுடன், அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. இதில், கொட்டும் மழையிலும், ஏராளமான போயர் சமுதாய மக்கள் உட்பட, பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us