sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தோடர் கிராமத்தில் 'மொற்பர்த்' பண்டிகை கோலாகலம்

/

 தோடர் கிராமத்தில் 'மொற்பர்த்' பண்டிகை கோலாகலம்

 தோடர் கிராமத்தில் 'மொற்பர்த்' பண்டிகை கோலாகலம்

 தோடர் கிராமத்தில் 'மொற்பர்த்' பண்டிகை கோலாகலம்


ADDED : டிச 29, 2025 06:24 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய 'மொற்பர்த்' பண்டிகை கொண்டாடப்பட்டது.

நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களில், தோடர் பழங்குடியினர் பல்வேறு தனித்துவமான பாரம்பரிய வழக்கங்களை கொண்டுள்ளனர். இவர்கள், டிச., இறுதி அல்லது ஜன., முதல் வாரத்தில் 'மொற்பர்த்' என்ற பண்டிகையை கொண்டுவது வழக்கமாக உள்ளது. நடப்பாண்டின் பண்டிகை, தோடரின மக்களின், தலைமை இடமாக கருதப்படும், ஊட்டி தலைகுந்தா அருகில் அமைந்துள்ள முத்தநாடு மந்து பகுதியில் நேற்று நடந்தது.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தோடரின மக்கள் பாரம்பரிய கோவிலில் மண்டியிட்டு சிறப்பு வழிபாடு நடத்தி, பாரம்பரிய உடை அணிந்து, கோவிலை சுற்றி நடனமாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, இளைஞர்கள் இளவட்ட கல்லை துாக்கி தங்களது வலிமையை வெளிப்படுத்தினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், பால் மற்றும் நெய் ஆகியவற்றில் பிரத்யேகமாக தயாரித்த பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில், உள்ளூர் மக்களுடன், காசி பானாரஸ் பல்கலைகழக மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, தோடர் பழங்குடியின நிர்வாகிகள் மற்றும் மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us