/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய பாலத்தை ஒட்டி சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அதிருப்தி
/
புதிய பாலத்தை ஒட்டி சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அதிருப்தி
புதிய பாலத்தை ஒட்டி சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அதிருப்தி
புதிய பாலத்தை ஒட்டி சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அதிருப்தி
ADDED : டிச 09, 2024 04:43 AM

கூடலுார் : முதுமலை மைசூரு சாலையில் புதிய பாலத்தை ஒட்டிய சாலை சேதமடைந்து வருவதால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலை கார்குடி, கல்லல்லா பகுதியில் சேதமடைந்த பழைய பாலத்தை அகற்றி, 3.85 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கும் பணி கடந்தாண்டு துவங்கப்பட்டது.
வாகன போக்குவரத்து பாதிக்காத வகையில் அப்பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பழைய பலத்தை அகற்றினர். புதிய பாலம் பணி நிறைவடைந்த நிலையில், நடப்பு ஆண்டு போக்குவரத்து துவங்கப்பட்டது. புதிய பாலங்களை ஒட்டி சாலையின் இருபுறமும், சிறிது துாரம் சீரமைக்கப்பட்டது. இதனை நிரந்தரமாக சீரமைக்க ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'கார்குடி, கல்லல்லா பகுதியில், சேதமடைந்த குறுகிய பாலம் அகற்றப்பட்ட புதிய பாலம் அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம். ஆனால், பாலத்தை ஒட்டி சாலையின் இருபுறமும் சேதமடைந்துள்ளது. அதிகாரிகள், பகுதியில் ஆய்வு செய்து, சேதம் அடைந்த பகுதியை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.