sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி; தடுமாறும் வாகன ஓட்டிகள்

/

 சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி; தடுமாறும் வாகன ஓட்டிகள்

 சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி; தடுமாறும் வாகன ஓட்டிகள்

 சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி; தடுமாறும் வாகன ஓட்டிகள்


ADDED : டிச 11, 2025 06:08 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் -மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், சேதமடைந்த பகுதியில் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் சாலையில் சிதறி கிடப்பதால், வாகன ஓட்டுனர்கள் தடுமாறுகின்றனர்.

ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார் வழியாக செல்கின்றனர். இச்சாலையில், ஊசிமலை - தொரப்பள்ளி -இடையே உள்ள, 16 கி.மீ., துாரமுள்ள சாலை பல இடங்களில் சேத மடைந்துள்ளது.

நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாத நிலையில், நடப்பு ஆண்டு பெய்த பருவமழையில் சாலை மேலும் சேதமடைந்தது. ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேதமடைந்த பகுதிகளில், கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் சாலையில் சிதறி கிடப்பதால், இருசக்கர வாகனங்கள் இயக்க ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'சாலையில் சேத மடைந்த பகுதியில், தற்காலிகமாக சீரமைப்பு பணி நடந்துள்ளது.

ஊசிமலை முதல் தொரப்பள்ளி வரையிலான,13 கி.மீ., துார சாலையில், சேதமடைந்த பகுதிகளில், 'பேட்ச் ஒர்க்' பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை, 5.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

பணிகள் விரைவில் துவங்கப்படும். தொடர்ந்து, 2027 ல் இச்சாலை, முழுமையாக சீரமைக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us