sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

முதுமலை வனப்பகுதி பாதுகாப்பு; தானியங்கி கேமராக்களில் கண்காணிப்பு

/

முதுமலை வனப்பகுதி பாதுகாப்பு; தானியங்கி கேமராக்களில் கண்காணிப்பு

முதுமலை வனப்பகுதி பாதுகாப்பு; தானியங்கி கேமராக்களில் கண்காணிப்பு

முதுமலை வனப்பகுதி பாதுகாப்பு; தானியங்கி கேமராக்களில் கண்காணிப்பு


ADDED : ஜன 30, 2024 12:35 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;முதுமலையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனப்பகுதியில், 8 இடங்களில் சோலார் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் குற்றங்களை தடுக்க வேட்டை தடுப்பு முகாம்கள் அமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், வனப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனத்தீ ஏற்படுவதை அறிந்து, அதனை தடுக்கவும் வனப்பகுதியில், 8 இடங்களில் சோலார் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் கோபுரங்கள் வைத்து அமைக்கப்பட்டுள்ளது.அதில், பதிவாகும் காட்சிகளை தெப்பக்காடு கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வனத்துறையினர் கூறுகையில்,'முதுமலை வனப்பகுதிகள் அமைக்கப்பட்டுள்ள வேட்டை தடுப்பு முகாம்களில், ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இதனால், வேட்டை மற்றும் வனம் குற்றங்களை தடுக்கவும், வனத்தீ ஏற்பட்டால் உடனடியாக தடுக்கவும் உதவியாக இருக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us