ADDED : ஆக 20, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி அருகே, முத்தோரை பாலாடா தோடர் காலனி பகுதியில் நேற்றிரவு இரு காட்டெருமைகளுக்கு இடையே நடந்த சண்டையில் ஒரு காட்டெருமை பலத்த காயமடைந்தது.
தகவலின் பேரில், ஊட்டி தெற்கு வனச்சரகர் ரங்கராஜன் தலைமையில், வனத்துறையினர் மற்றும் கால்நடை துறை வட்டார இணை இயக்குனர் பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் படுகாயம் அடைந்த காட்டெருமைக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்கு பின், காட்டெருமையின் உடல் அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
