sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானை தாக்கி ஒருவர் பலி: மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது

/

யானை தாக்கி ஒருவர் பலி: மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது

யானை தாக்கி ஒருவர் பலி: மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது

யானை தாக்கி ஒருவர் பலி: மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது


ADDED : செப் 10, 2025 03:29 AM

Google News

ADDED : செப் 10, 2025 03:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி, பெரியார் நகரை சேர்ந்த மெகபூப், 38, தனியார் எஸ்டேட் சூப்பர்வைசர். அதே எஸ்டேட்டில் டெல்லோஸ்சை சேர்ந்த செல்லதுரை கள அலுவலராக பணிபுரிந்தார்.

இருவரும், நேற்று காலை, 7:00 மணிக்கு ஸ்கூட்டரில், 'குயின்ட்' சாலை வழியாக, எஸ்டேட் நோக்கி சென்றனர். டி.ஆர்.சி., காபி தோட்டம் அருகே, திடீரென, குட்டியுடன் சாலைக்கு வந்த யானை, இவர்களை கீழே தள்ளிவிட்டு சென்றது.

இதில், காயமடைந்த இருவரும், கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, மெகபூப் உயிரிழந்தார். காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, அப் பகுதி மக்கள், காலை 9:55 மணிக்கு, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்ட னர். தமிழகம், கேரளா, கர்நாடக ா இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடுதல் எஸ்.பி., மணிகண்டன், கூடலுார் டி.எஸ்.பி., ஜெயபால், இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து, 10 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us