ADDED : ஆக 12, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: நீலகிரி மாவட்ட மைய நுாலகத்தில், தேசிய நுாலக தந்தை டாக்டர் அரங்கநாயகத்தின் பிறந்த நாளை நுாலகர் தினமாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட நுாலகர் அலுவலர் கிளமென்ட் தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலகர் ரவி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், டாக்டர் அரங்கநாதனின் செயல்கள், நூலகர்கள் மத்தியில் நினைவு கூறப்பட்டது. நூலக பணியாளர்களுக்கு மியூசிக்கல் சேர் , லக்கி கேம் , பின்னால் நடப்பது, பலூன் உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நுாலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனா.
