sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவிலுக்குள் புகுந்து பூஜை பொருட்கள் சூறை; கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

/

கோவிலுக்குள் புகுந்து பூஜை பொருட்கள் சூறை; கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

கோவிலுக்குள் புகுந்து பூஜை பொருட்கள் சூறை; கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

கோவிலுக்குள் புகுந்து பூஜை பொருட்கள் சூறை; கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்


ADDED : ஆக 01, 2025 07:46 PM

Google News

ADDED : ஆக 01, 2025 07:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி அருகே துளிதலை கிராமத்தில் முருகன் கோவிலுக்குள் புகுந்த கரடி பூஜை பொருட்களை சூறையாடி சென்றது. ஊட்டி அருகே இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட துளிதலை கிராமத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்தில் கரடி ஒன்று சுற்றி திரிந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு வந்த கரடி கதவை உடைத்து உள்ளே சென்று பூஜை பொருட்களை சூறையாடி சென்றது. மறுநாள் கோவிலுக்கு வந்த கிராம மக்கள் கோவில் கதவு உடைக்கப்பட்டு பூஜை பொருட்கள் சூறையாடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஊர் தலைவர் ரகுலிங்கன் கூறுகையில், '' கரடி ஒன்று கிராமத்தில் சுற்றித்திரிந்து கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது. கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை சூறையாடி சென்றது.

வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு சென்றனர். கிராம மக்கள் சார்பில் அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், என, வனத்துறைக்கு மனு அளித்துள்ளோம் வனத்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us