sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையோரத்தில் கேட்பாரற்று கிடக்கும் மர துண்டுகள்

/

சாலையோரத்தில் கேட்பாரற்று கிடக்கும் மர துண்டுகள்

சாலையோரத்தில் கேட்பாரற்று கிடக்கும் மர துண்டுகள்

சாலையோரத்தில் கேட்பாரற்று கிடக்கும் மர துண்டுகள்


ADDED : ஏப் 28, 2025 11:38 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'சாலையோரத்தில் கேட்பாரற்று கிடக்கும் மரத் துண்டுகளை அகற்றி சம்பந்தப்பட்ட துறையினர் அரசுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், 6 தாலுகா பகுதிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் சாலையோரங்களில் கற்பூர மரங்கள் ஓங்கி வளர்ந்து உள்ளன. நுாறு ஆண்டு பழமை வாய்ந்த இந்த மரங்கள், பருவ மழை சமயத்தில் பலத்த காற்று வீசும் போது சாலையின் குறுக்கே விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறுக்கே விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர், 'பவர்ஷா' உதவியுடன் அறுத்து அகற்றி சாலை ஓரத்தில் வைக்கின்றனர்.

அதன்படி , ஊட்டி- -மஞ்சூர் சாலை குன்னுார், கூடலுார், இத்தலார் உள்ளிட்ட பிரதான சாலை மற்றும் கிராமப்புற சாலைகளில் கற்பூர மரங்கள் அறுத்து மர துண்டுகளாக சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பருவமழைக்கு விழுந்த மரங்கள் அனைத்தும் வனத்துறைக்கு சொந்தமானது. இந்த மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாவட்ட முழுவதும் இது போன்ற மரங்களை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் பயன்படுத்தும் வகையில், ஏலம் விட்டு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us