/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் அருகே பெண் கொலை; போலீஸ் விசாரணை
/
கூடலுார் அருகே பெண் கொலை; போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 03, 2025 09:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுார் அருகே, பெண் கொலை தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் காசிம்வயல் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் கிளாடிஸ்,31.
இவர், வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக, நேற்று இரவு கூடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்காக கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த கொலை தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைக்கு பின் கொலைக்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.