sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மசினகுடியில் இறந்த புலிக்கு பிரேத பரிசோதனை

/

மசினகுடியில் இறந்த புலிக்கு பிரேத பரிசோதனை

மசினகுடியில் இறந்த புலிக்கு பிரேத பரிசோதனை

மசினகுடியில் இறந்த புலிக்கு பிரேத பரிசோதனை


ADDED : ஆக 25, 2025 09:08 PM

Google News

ADDED : ஆக 25, 2025 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; முதுமலை, மசினகுடி வன கோட்டம், சிங்கார வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்குவாரியை ஒட்டி, வயது முதிர்ந்த பெண் புலி, நடக்கவும், உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து கொண்டிருந்தது. வனத்துறையினர், அதனை, 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், மாலை புலி உயிரிழந்தது. அதன் உடலை, முதுமலை துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தனபால், தமிழ்நாடு வனகுற்ற தடுப்பு பிரிவு வனச்சரகர் முருகன், வனவர் சங்கர் ஆகியோர் முன்னிலையில், முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், மசினகுடி அரசு கால்நடை டாக்டர் இந்துஜா ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் புலிக்கு, 12 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக, பற்கள் தேய்ந்துள்ளது. உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. உடலில் மற்றொரு புலி தாக்கிய காயமும் உள்ளது. வேட்டையாடும் தன்மை இழந்து, உணவு உட்கொள்ள முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளது. ஆய்வுக்காக உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது,'என்றனர்.






      Dinamalar
      Follow us