sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு பண்ணையில் லிச்சி செடிகள் உற்பத்தி; தாய் செடிகள் நடவு

/

அரசு பண்ணையில் லிச்சி செடிகள் உற்பத்தி; தாய் செடிகள் நடவு

அரசு பண்ணையில் லிச்சி செடிகள் உற்பத்தி; தாய் செடிகள் நடவு

அரசு பண்ணையில் லிச்சி செடிகள் உற்பத்தி; தாய் செடிகள் நடவு


ADDED : டிச 23, 2024 10:21 PM

Google News

ADDED : டிச 23, 2024 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் பொன்னுார் அரசு தோட்டக்கலை பண்ணையில், பீகாரில் இருந்து எடுத்துவரப்பட்ட தாய் செடிகள் மூலம், லிச்சி செடிகள் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளனர்.

நம் நாட்டில் உள்ள மலை பிரதேசங்களில் வழங்க கூடிய பழங்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. சீசன் காலங்களில், அந்தந்த பழங்களை உண்பதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் விளைய கூடிய பல வகை பழங்கள் பல்வேறு சத்துக்களையும், நோய்களை தீர்க்கும் தன்மை கொண்டுள்ளன.

அதில், கூடலுாரில் உள்ளூரில் விளையும் பழங்களை தவிர, நாட்டில் மற்ற பகுதிகளில் விளையக்கூடிய பழ செடிகளையும் எடுத்து வந்து இங்கு நடவு செய்து பயனடைந்து வருகின்றனர்.

லிச்சி பழ தாய் செடிகள்


அதன்படி, பல்வேறு சத்துக்களையும், நோய் தடுப்புக்கு பயன்படக்கூடிய லிச்சி பழ செடிகளை கூடலுாரில் உற்பத்தி செய்ய, தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக, பீகார் மாநிலத்தில் உள்ள தேசிய லிச்சி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, 600 லிச்சி தாய் செடிகளை, பொன்னுார் தோட்டக்கலை பண்ணைக்கு கொண்டு வந்துள்ளனர். தாய் செடிகள் பயன்படுத்தி, லிச்சி செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'லிச்சி பழங்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மிக குறைந்த அளவு மட்டுமே இவை உற்பத்தி செய்யப்படுகிறது.

கூடலுாரில் இச்செடிகள் உற்பத்தி செய்வதற்கான காலநிலை உள்ளதால், பீகாரில் உள்ள தேசிய லிச்சி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து, தாய் செடிகள் பண்ணைக்கு கொண்டுவரப்பட்டு, நடவு செய்யப்பட்டுள்ளது. தாய் செடிகளிலிருந்து லிச்சி செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். லிச்சி பழத்தின் தேவை அதிகமாக இருப்பதுடன், நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us