ADDED : அக் 09, 2024 09:58 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி : கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, பாடநுால் நோட்டு புத்தகம் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.
பள்ளி பருவ தேர்வு விடுமுறை முடிந்து, இரண்டாம் பருவ துவங்கிய நிலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் முன்னிலை வகித்தார்.
கோத்தகிரி பேரூராட்சி கவுன்சிலர் சகுந்தலா காளிதாஸ் பாடநுால் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் எழுது பொருட்களை வழங்கினார்.
