sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மேட்டுப்பாளையம் சாலையில் மழை கால அபாயம்; தடுப்பு சுவரில் விரிசல்: ஆய்வு செய்வது அவசியம்

/

மேட்டுப்பாளையம் சாலையில் மழை கால அபாயம்; தடுப்பு சுவரில் விரிசல்: ஆய்வு செய்வது அவசியம்

மேட்டுப்பாளையம் சாலையில் மழை கால அபாயம்; தடுப்பு சுவரில் விரிசல்: ஆய்வு செய்வது அவசியம்

மேட்டுப்பாளையம் சாலையில் மழை கால அபாயம்; தடுப்பு சுவரில் விரிசல்: ஆய்வு செய்வது அவசியம்


ADDED : அக் 23, 2024 09:47 PM

Google News

ADDED : அக் 23, 2024 09:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார்-- மேட்டுப்பாளையம் சாலையில், 6வது வளைவு அருகே தடுப்பு சுவரில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பருவமழை தொடரும்பட்சத்தில் சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார்- -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அதில், 6வது கொண்டை ஊசி வளைவு பகுதியில், 30 அடி உயரத்திற்கு மேல் பிரம்மாண்ட தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

ஆற்றோரமாக உள்ள இந்த இடம் சாலை பகுதியில் சிறியளவில் உள்வாங்கி, லேசான விரிசலும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கு முன்பு இதே இடத்தில் ஏற்பட்ட விரிசலை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைத்தனர். எனினும் மீண்டும் சிறிது, சிறிதாக விரிசல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வடகிழக்கு பருவ மழை அதிகரித்தால், இப்பகுதி இடிந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மழை தீவிரம் அடைவதற்கு முன்பு, நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us