sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையோரம் குவிந்த குப்பைகள் அகற்றம்

/

சாலையோரம் குவிந்த குப்பைகள் அகற்றம்

சாலையோரம் குவிந்த குப்பைகள் அகற்றம்

சாலையோரம் குவிந்த குப்பைகள் அகற்றம்


ADDED : நவ 22, 2024 11:26 PM

Google News

ADDED : நவ 22, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: மேல்கூடலுார் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் குவிந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி சீரமைத்தனர்.

கூடலுார் பகுதியில், திறந்தவெளியில் குப்பைகளை கொட்டுவதை நகராட்சி தடை செய்துள்ளது. எனினும், சில பகுதிகளில் தொடர்ந்து திறந்த வெளியில் பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனை தடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேல்கூடலுார் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம், திறந்த வெளியில் குப்பைகள் குவிந்து கிடந்தது. அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், மழைநீர் வழிந்தோட தடையும் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

தொடர்ந்து, கூடலுார் நகராட்சி கமிஷனர் சுவீதாஸ்ரீ உத்தரவுப்படி, நகராட்சி ஊழியர்கள், சாலையோரம் குவிந்த குப்பைகளை அகற்றி சீரமைத்தனர். மேலும், அப்பகுதி மக்களிடம் குப்பைகளை தெரு ஓரங்கள், திறந்த வெளிகளில் கொட்டுவதை தவிர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us