sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் செல்லும் ஊர்வன உயிரினங்கள்; வாகன இயக்கத்தில் கவனம் தேவை

/

சாலையில் செல்லும் ஊர்வன உயிரினங்கள்; வாகன இயக்கத்தில் கவனம் தேவை

சாலையில் செல்லும் ஊர்வன உயிரினங்கள்; வாகன இயக்கத்தில் கவனம் தேவை

சாலையில் செல்லும் ஊர்வன உயிரினங்கள்; வாகன இயக்கத்தில் கவனம் தேவை


ADDED : டிச 12, 2024 09:53 PM

Google News

ADDED : டிச 12, 2024 09:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; 'பந்தலுார் பகுதி சாலைகளில், ஊர்வன வகை வனவிலங்குகள், அதிக அளவில் உலா வருவதால் வாகன ஓட்டுனர்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பந்தலுார் பகுதி சாலைகள் எஸ்டேட் மற்றும் வனப்பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளன. இதனால், யானை, சிறுத்தை, முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பாம்பு, பச்சோந்தி போன்ற ஊர்வன வகை விலங்குகளும் அதிக அளவில், சாலையை கடந்து செல்வது வழக்கம். அதில், ஊர்வன வகை விலங்குகள் அதிக அளவில், சாலைகளில் வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.

சமீப காலமாக, பந்தலுாரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையில், அதிக அளவில் பச்சோந்திகளை காண முடிகிறது. வாகனங்கள் வரும்போது எந்த பகுதியில் செல்வது என்று தெரியாமல் பச்சோந்திகள் சாலை நடுவில் நின்று விடுகின்றன. வேகமாக வரும் வாகனங்கள் இதுபோன்ற ஊர்வன வகை விலங்குகள் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்து வருகிறது.

வனத்துறையினர் கூறுகையில், ' பந்தலுார் சேரம்பாடி சாலைகளில், ஊர்வன வகை உயிரனங்கள், வன விலங்குகள், அதிக அளவில் உலா வருவதால் வாகன ஓட்டுனர்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். சிறிய உரியினங்கள் சாலையை கடந்து செல்லும் வரை வாகனங்களை நிறுத்த வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us