sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

/

 சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

 சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

 சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை


ADDED : பிப் 03, 2026 05:46 AM

Google News

ADDED : பிப் 03, 2026 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: நல்ல நிலையில் உள்ள நாடுகாணி -தேவாலா அட்டி சாலையை, தேவையின்றி சீரமைப்பதை கைவிட வலியுறுத்தி, எம்.எல்.ஏ., தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

கூடலுார் நாடுகாணியில் இருந்து, தேவாலா அட்டி சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையில் நாடுகாணி முதல், டான்டீ செட் வரை, 1.3 கி.மீ., சாலை சீரமைப்பு பணி துவங்கி நடந்தது. அதில், 800 மீட்டர் துாரம் சீரமைக்கும் பணி நடந்தது.

இந்நிலையில், 'நெல்லியாளம் நகராட்சி பகுதியில், சேதமடைந்த பல சாலைகள் சீரமைக்க நடவடிக்கை இல்லாத நிலையில், நல்ல நிலையில் உள்ள, இச்சாலையை தேவையின்றி சீரமைப்பதை நிறுத்த வேண்டும். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்' என, வலியுறுத்தி, கூடலுார் எம்.எல்.ஏ., ஜெயசீலன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் நேற்று முன்தினம் காலை, 11:15 மணிக்கு, நாடுகாணி - தேவாலா அட்டி சாலையில் அமர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேவாலா டி.எஸ்.பி., கல்யாணகுமார் மற்றும் போலீசார், 'சாலை பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும்,' என, வலியுறுத்தினார். அதனை ஏற்க மறுத்த, எம்.எல்.ஏ., 'நகராட்சி அதிகாரிகள் வரவேண்டும்,' என, கூறி போராட்டத்தை தொடர்ந்தார்.

அதன்பின், நெல்லியாளம் நகராட்சி பொறியாளர் விஜயகுமார்,'இந்த சாலையில் மற்றப்பகுதிகளை சீரமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும்,' என தெரிவித்தார். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us