ADDED : ஆக 30, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
பந்தலூர்:
பந்தலூர் அருகே கோட்டைப்பாடி பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. கிராம மக்கள் தங்களின் சமுதாய நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, குடியிருப்புகளுக்கு மத்தியில் தங்கள் சொந்த செலவில் சமுதாய கூடம் அமைத்துள்ளனர்.
பழமையான இந்த கட்டடத்தின் மேற்கூரையை உரசி செல்லும் வகையில் மின்கம்பிகள் செல்கிறது. பலத்த காற்று வீசினால் மின் கம்பிகள் கூரையை உரசினால் ஆபத்து ஏற்படும்.
மேலும், மேற்கூரை பழுது ஏற்பட்டால், சீரமைக்கும் போதும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இந்த கம்பிகளை உயரமாக பொருத்த வேண்டுமென பழங்குடியின மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
