ஊட்டி ராமகிருஷ்ணா மடம் சார்பில் ரூ. 30 லட்சம் கல்வி உதவி தொகை
ஊட்டி ராமகிருஷ்ணா மடம் சார்பில் ரூ. 30 லட்சம் கல்வி உதவி தொகை
ADDED : செப் 11, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி ராமகிருஷ்ணா மடம் சார்பில் மாணவர்களுக்கு , 30 லட்சம் ரூபாயில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
ஊட்டி ராமகிருஷ்ணா மடம் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சுவாமி ராகவேஷானந்தா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மக்கள் சட்ட மைய மாநில இயக்குனர் வக்கீல் விஜயன் பங்கேற்று, ஊட்டி வட்டத்திற்கு உட்பட்ட , 28 அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு , 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகை வழங்கி பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விவேகானந்தா நினைவு மெட்ரிக பள்ளி முதல்வர் ரமேஷ் , ஆசிரமத்தின் பக்தர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
