/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை துாள் ஏலங்களில் ரூ. 36.63 கோடி வருவாய்
/
தேயிலை துாள் ஏலங்களில் ரூ. 36.63 கோடி வருவாய்
ADDED : செப் 29, 2025 09:47 PM
குன்னுார்:
தென் மாநில அளவில், தேயிலை ஏலங்களில், 36.63 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 39வது ஏலத்தில், '14.64 லட்சம் கிலோ இலை ரகம்; 4.12 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 18.76 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
'13.07 லட்சம் கிலோ இலை ரகம்; 3.12 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 16.19 லட்சம் கிலோ விற்பனையானது. மொத்த வருமானம், 15.55 கோடி ரூபாய் கிடைத்தது.
கடந்த ஏலத்தை விட, 24 ஆயிரத்து 929 கிலோ வரத்தும், 75 ஆயிரத்து 68 கிலோ விற்பனையும் அதிகரித்தது. கிலோவிற்கு, 44 பைசா குறைந்தது. 66 லட்சம் ரூபாய் வருவாய் அதிகரித்தது.நீலகிரி மாவட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் ஏலம், டீசர்வ் ஏல மையத்தில் நடந்து வருகிறது. நடந்த ஏலத்தில், 1.33 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 1.29 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 86.82 ரூபாயாக இருந்தது. 1.12 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 30 ஆயிரம் கிலோ வரத்தும், 24 ஆயிரம் கிலோ விற்பனையும் குறைந்தது. எனினும், கிலோவிற்கு, 2.97 ரூபாய் உயர்ந்தது. வருமானத்தில், 16 ஆயிரம் ரூபாய் வீழ்ச்சி கண்டது.
கோவை ஏல மையத்தில், நடந்த ஏலத்தில், 3.96 லட்சம் கிலோ வந்ததில், 3.65 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 126.69 ரூபாயாக இருந்தது. 4.62 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 9 ஆயிரம் கிலோ வரத்து இருந்தது.
கொச்சி ஏல மையத்தில், '9.55 லட்சம் கிலோ வந்ததில், 9.12 லட்சம் கிலோ,' விற்பனையானது. சராசரி விலை, 168.08 ரூபாய் என இருந்தது. 15.34 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது . 'வரத்து, 1.63 லட்சம் கிலோ, விற்பனை 1.65 லட்சம் கிலோ, மொத்த வருவாய் 3.33 கோடி ரூபாய் என அதிகரித்தது. கிலோவிற்கு, 7.58 ரூபாய் அதிகபட்சமாக உயர்ந்தது. தென் மாநில அளவில், 36.63 கோ டி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
குன்னுார், கொச்சி ஏல மையங்களில் விற்பனை, மொத்த வருவாய் உயர்வு ஏற்பட்டதால், கடந்த ஏலத்தை விட, 3.63 கோடி மொத்த வருவாய் ரூபாய் உயர்ந்தது.